ஈர்ப்பு விதி
ஈர்ப்பு விதி என்பது உளவியலில்(psychology) பெரும் பங்கு வகிக்கிறது. இது ஒரு காந்தசக்தியாக (magnetic energy)கருதப்படுகிறது. சுய பிரகடனம் (auto suggestions), அதாவது எதை அடைய நினைத்தாலும் , அதன் நேர் மறை எண்ணங்களை மனதில் பதிய வைத்து அதை நினைத்து மனக் காட்சி (visualisation)மூலம்,செயலில் இறங்கி நினைத்ததை அடைவது. இதுவே ஈர்ப்பு விதியாக கூறப்படுகிறது. மிகவும் எளிதாக நினைக்கும் முறையாக தோன்றினாலும், ஆழ்மனதை வைத்து முயற்சி பண்ணினால், நாம் விரும்பியதை அடைய முடியும் என்பதே ஈர்ப்பு விதி. (When you become an magnet of something, you can attract anything you want. This is Law of attraction) சுய எண்ணங்கள் தான் காந்தசக்தி. நீங்கள் என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவே ஆகிவிடுவீர்கள் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். இது புத்தர் கூறியது. இதையே தான் அப்துல் கலாம் கூறினார்."கனவு காணுங்கள், நீங்கள் என்ன கனவு காணுகிறீர்களோ அதுவாக ஆகுவீர்கள்" என்றார். ஈர்ப்பு விதி 3 பகுதிகளில் அடங்கும். கேட்பது (ask) நம்புவது (believe) அடைவது (receive) நாம் முதலில் நமக்கு என்ன வேண்டும், என்று முடிவு செய்து கொள்...