Posts

Showing posts from January, 2022

விஞ்ஞானமும் மெய்ஞானமும்

*விஞ்ஞானமும் மெய்ஞானமும்* *********************************** ஆதியும் அந்தமும் இல்லாத பராபரம் பேதமது ஆகிப் புணரும் பராபரை என்று திருமந்திரம் சொல்கிறது. வெட்ட வெளியே மெய்யென்று இருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் என்று இந்த வெட்ட வெளியாகிய பிரபஞ்சத்தைக் குதம்பைச் சித்தர் குறிப்பிடுகிறார். உலகம் தோன்றி, அதில் உயிரினங்கள் தோன்றி, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் பேரில் ஆதி முதல் மனிதன் தோன்றி, மானுட வர்கம் பெருகி, மனிதன் சிந்திக்க கற்றுகொண்ட காலம் முதலாக மனித அறிவு வளர்ந்து வந்து இருக்கிறது. இந்த அறிவின் வளர்ச்சி காரணமாகவே; இன்றய அறிவியல் புதுமைகளும், கலைப்புதுமைகளும், இலக்கிய இலக்கணங்களும் வளர்ந்து நின்று மானுட வாழ்வை மிளிரச் செய்துக் கொண்டு இருக்கின்றன. இவை அனைத்துக்கும் அடிப்படை மனிதன் பெற்றுக் கொண்ட அறிவின் முதிர்ச்சியே ஆகும். அறிவு என்பது அறிந்து வைத்துக் கொள்ளுவது என பொருள்படுகிறது. அறிந்து கொள்ளுவதாகிய இந்த அறிவு, ஞானம் என்ற சொல்லாலும் குறிக்கப்படுகிறது. இந்த அறிவாகிய ஞானம், இரண்டு வகையாக சான்றோர்களால் பிரித்துப் பார்க்கப்படுகிறது. ஒன்று விஞ்ஞானம் மற்றது மெய்ஞானம். விஞ்ஞானம...

ரசமலாய்

Image
ரசமலாய் இனிப்புகளில் ரசகுல்லா விற்கு இனிப்பு பிரியர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதை விட ரசமலாய்க்கு பல மடங்கு மவுசு உண்டு. ரசகுல்லாவும் ரசமலாய்யும் ஏறத்தாழ ஒரே செய்முறையை கொண்டவைதான். ஆனால் சர்க்கரை தண்ணீருக்கு பதிலாக ரசமலாயை ராப்ரியில் ஊர விடுகிறார்கள். இந்தியாவில் உள்ள மேற்கு வங்கத்தில் உதயமானது என்று ஒரு சாராரும். இது ஒடிசாவில் உதயமானது என்று மற்றொரு சாராரும் கூறுகிறார்கள். இவை இந்தியா மட்டுமின்றி வங்க தேசம் மற்றும் பாக்கிஸ்தானிலும் பிரபலமடைந்து இருக்கிறது. இப்போது கீழே ரசமலாய் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம். ரசமலாய்  Recipe இனிப்புகளில் ரசகுல்லா விற்கு இனிப்பு பிரியர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதை விட ரசமலாய்க்கு பல மடங்கு மவுசு உண்டு. Course:  Dessert Cuisine:  Indian Keyword:  rasmalai Ingredients for  ரசமலாய் 2   litres   பால் சர்க்கரை   தேவையான அளவு 1   எலுமிச்சம் பழம் 1   மேஜைக்கரண்டி   ஏலக்காய் தூள் பிஸ்தா   தேவையான அளவு பாதாம் ...

கில்லு பாத்திரம் (killu paathiram recipe in tamil)

Image
கில்லு பாத்திரம் (killu paathiram recipe in tamil) தேவையான பொருட்கள்  2 பரிமாறுவது 1/2கப் இட்லி புழுங்கல் அரிசி மாவு 1/2கப் துவரம் பருப்பு 10பூண்டு 5காய்ந்த மிளகாய் 1/2டீஸ்பூன் கடுகு 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1 கொத்து கருவேப்பிலை சிறிது உப்பு 1 சிட்டிகை பெருங்காயம் மஞ்சள் தூள் இட்லி புழுங்கல் அரிசியை ஊறவைத்து உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த மாவை ஊத்தாப்பம் போல் தோசை ஊற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் மிக்சியில் அல்லது அம்மியில் அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்து வைத்த பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்த பருப்பை அதனுடன் சேர்த்து கெட்டியாக கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் வெட்டிய துண்டுகளை அதனுடன் சேர...

தை அமாவாசையில் முன்னோர்களை ஏன் வணங்க வேண்டும் - தர்ப்பணம் எப்போது கொடுக்கலாம்

Image
தை அமாவாசையில் முன்னோர்களை ஏன் வணங்க வேண்டும் - தர்ப்பணம் எப்போது கொடுக்கலாம் நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளான தை அமாவாசை வரும் 31ஆம் ஆம் தேதி வருகிறது. இந்த நாள் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களின் வீடுகளில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே வரும் தை அமாவாசை நாளில் நாம் மறக்காமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும். பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயாண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனே இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் மாதுர்காரகனாகிய சந்...

ஒவ்வாமையை ஏற்படுத்தும் குளுட்டன் உணவுகள்... யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

Image
ஒவ்வாமையை ஏற்படுத்தும் குளுட்டன் உணவுகள்... யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? எப்போதும் இல்லாத அளவுக்கு உணவு பற்றிய விழிப்புணர்வு கடந்த சில மாதங்களில் மிகவும் அதிகமாகி உள்ளது. குறிப்பாக, இந்தக் கொரோனா காலத்தில் மக்களின் கவனம் சிறந்த சத்தான, மருத்துவ குணமுள்ள உணவுமுறையைக் கடைப்பிடிப்பது மற்றும் நோயற்ற வாழ்வு பக்கம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. உணவே மருந்து என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், பலருக்கு சில வகை உணவுகள் ஒவ்வாமையாக மாறிவிடுகிறது. அவற்றில் ஒன்றுதான் குளுட்டன் கலந்த உணவுகள். குளுட்டன் என்பது ஒரு வகை புரதம். பசைத்தன்மை நிறைந்தது. கோதுமை, பார்லி போன்ற தானிய வகைகளில் இந்த குளுட்டன் அதிகம் காணப்படுகிறது. ஒட்டும் தன்மை, நெகிழ்வுத் தன்மை மற்றும் மெல்ல எளிதான தன்மை போன்றவை குளுட்டன் உணவுகளின் இயல்புகள். இதனால் இதை பிரட், பிஸ்கட், ரஸ்க், பேக்கரி உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். குளுட்டன் ஃப்ரீ டயட் சமீப காலமாக மிகவும் பிரபலமாகியுள்ளது. குளுட்டனை எல்லோரும் தவிர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் `சீலியாக்' (celiac) எனப்படும் நோய் உள்ளவர்கள் அவசியம் குளுட்டன் ஃப்ரீ உணவுகளையே...