நினைவிருக்கும் வரை… கடந்த காலத்தில் செய்யப்பட்ட நலவுகளை,உதவி செய்த உறவுகளை மறவாதே!!!
சமூகத்தில் கல்வியால், செல்வாக்கால், அந்தஸ்த்தால், பொருளாதாரத்தால், அதிகாரத்தால் மரியாதையை, உச்சத்தை தொட்டிருக்கும் நம்மில் பலர் ஒரு காலத்தில் எப்படி இருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்க மறந்து விடுகின்றார்கள்.
ஒரு நேர உணவு அன்று அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்திருக்கலாம்; துவக்கக்கல்வி அன்று அவர்களுக்கு கனவாக இருந்திருக்கலாம்; நல்ல மருத்துவம் அன்று அவர்களுக்கு கானல் நீர் போன்று இருந்திருக்கலாம்.
இன்றைய உச்சத்தை அவர்கள் அடைய அன்று அவர்களுக்கு உதவியவர்கள், உறுதுணையாய் நின்றவர்கள், தாங்கிப்பிடித்தவர்கள், தூக்கிவிட்டவர்கள் என ஒரு பெரும் அல்லது சிறு மனித கூட்டமே உண்டு.
சில போது பெற்றோர்கள், சில போது சகோதர, சகோதரிகள், சில போது மனைவி, சில போது உறவினர்கள், சில போது நண்பர்கள், சில போது அண்டை வீட்டுக்காரர் இப்படியாக சிலரோ அல்லது முன் பின் அறியாத, முகம் தெரியாத எவரோ ஒருவர் கூட உதவி இருக்கலாம்.
Comments
Post a Comment