நினைவிருக்கும் வரை… கடந்த காலத்தில் செய்யப்பட்ட நலவுகளை,உதவி செய்த உறவுகளை மறவாதே!!!

சமூகத்தில் கல்வியால்செல்வாக்கால்அந்தஸ்த்தால்பொருளாதாரத்தால்அதிகாரத்தால் மரியாதையைஉச்சத்தை தொட்டிருக்கும் நம்மில் பலர் ஒரு காலத்தில் எப்படி இருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்க மறந்து விடுகின்றார்கள்.

ஒரு நேர உணவு அன்று அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்திருக்கலாம்துவக்கக்கல்வி அன்று அவர்களுக்கு கனவாக இருந்திருக்கலாம்நல்ல மருத்துவம் அன்று அவர்களுக்கு கானல் நீர் போன்று இருந்திருக்கலாம்.

இன்றைய உச்சத்தை அவர்கள் அடைய அன்று அவர்களுக்கு உதவியவர்கள்உறுதுணையாய் நின்றவர்கள்தாங்கிப்பிடித்தவர்கள்தூக்கிவிட்டவர்கள் என ஒரு பெரும் அல்லது சிறு மனித கூட்டமே உண்டு.

சில போது பெற்றோர்கள்சில போது சகோதரசகோதரிகள்சில போது மனைவிசில போது உறவினர்கள்சில போது நண்பர்கள்சில போது அண்டை வீட்டுக்காரர் இப்படியாக சிலரோ அல்லது முன் பின் அறியாதமுகம் தெரியாத எவரோ ஒருவர் கூட உதவி இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்