யார் இந்த ராகு கேது ?


ராகு, கேது, தோஷம் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னதாக, இவர்களைப்பற்றிய சில விவரத்தை இங்கு அறிந்து கொள்வோம். முதலில் சில சுருக்கமான புராண தகவல்கள் தெரிந்து கொள்வோம். ஆதிபராசக்தி தேவியை வழிபாடு செய்து தரிசனம் செய்த துர்வாச முனிவருக்கு அம்பாள் முன்னே தோன்றினாள்.

வேண்டும் வரம் கேள் என்றவுடன் முனிவர்  தனக்கு எந்த தேவைகளும் இல்லை தங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றதும் அம்பாள் மகிழ்ந்து தன் கழுத்தில் இருந்த பூமாலையை அவருக்கு கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினாள். இந்த பூமாலையுடன் வந்த முனிவர் அதை இந்திரனிடம் கொடுத்தார்.

இந்திரன் கர்வமாக அதை பெற்று தன்னுடைய யானையின் கழுத்தில் அனுவித்தான். கடும் சினம் கொண்ட முனிவர் தேவ குலத்தில் பிறந்து அமரர் என்று பெயர் உடைய நீயும் உன் குலத்தவர் அனைவரும் இனி அரக்க ஜென்மமாக மாறி விடுவிர்கள் என்று சபித்தவுடன் இந்திரன் அமரர் தன்மையை இழந்து முனிவரின் சாபத்தை அடைந்தான். இந்திராணி பயந்து முனிவரிடம் மன்னிப்பு கேட்டு தன் கணவன் செய்த
குற்றத்துக்கு இந்திரனுக்கு மன்னிப்பு கொடுத்து மீண்டும் அமரனாக வேண்டும் என்றாள்.

முனிவர் அமிர்தம் உண்டால் மீண்டும் தேவர்களாக முடியும் என்று சொல்லி சென்று விட்டார். அமிர்தம் பற்றி கருடன் அறிவார் அவரை கேட்கலாம் என்றால் அவர் தன் தாய்க்காக ஒரு முறை எடுத்து வந்தது பெரும் பாடு , நாம் என்ன செய்வது என்று குழம்பிய பொழுது நாரதர் விவரம் அறிந்து வந்தார். சில விவரங்களை சொன்னார். அதன் படி பெருமாளின் உதவியோடும் காற்றை உண்டு வாழும் வாசுகி பாம்புபை கயிறாக வைத்து மந்திர மலையால் பால் கடலை கடைந்தால் அமிர்தம் உண்டாகும் என்றார்.

இந்த யோசனையை ஒத்து கொண்ட தேவர்கள் பெருமாளின் அனுமதியோடு  கடைய முயற்சிக்கும் பொழுது நபர்கள் போதவில்லை. இந்திரன் அசுரர்களிடம் நாம் சேர்ந்து கடைந்தால் வரும் அமிர்தத்தில்
உங்களுக்கு பங்கு தருகிறேன் என்று ஆசை உண்டாக்கினான். நம்பிய அவர்கள் தலை பாகத்தில் அமிர்தம் வரும் என்று நம்பி நின்று கொண்டார்கள். கடையும் பொழுது தலையில் இருந்து நஞ்சு வெளிப்பட்டு எல்லா அசுரர்களும் இறந்தார்கள் முடிவில் வந்த அமிர்தம் பகிர்ந்து கொள்ள முனைந்த பொழுது சில அசுரர்கள் உயிருடன் இருப்பது இந்திரனுக்கு தெரிந்தது. சண்டை ஆரம்பம் ஆவது போல் இருக்கவே,

பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து அமிர்தத்தை பிரித்து தருவதாக சொன்னவுடன் எல்லோரும் அமைதியானார்கள். முதலில் வரிசையில் நின்ற தேவர்களுக்கு நிறைய அமிர்தம் தரப்பட்டது. இதை கவனித்த ஒரு அசுரன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் புகுந்து அவர்களுக்கு அறியாதவண்ணம் அமிர்தம் பெற்று உண்டான். இதை கவனித்த இந்திரன் மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் சக்ராயுதத்தால் தலையைக் கொய்தார். அமிர்தம் உண்டதால் உயிர் பிரிய வில்லை, தலையும் முண்டமும் துடித்தது.

இந்திரன் என்ன செய்வது என்று புலம்பும் பொழுது, பெருமாள் அவன் உடலில் இறந்த வாசுகி பாம்பின் தலையும், உடம்பையும் வைத்து விடு. என்று சொன்னார். அதன் படி செய்ய பட்டது. தேவர்கள் போல் தலையும் பாம்பின் உடலும் , பாம்பின் தலையும் தேவர்கள் உடலையும் பெற்று இரு உருவமாக நின்றவனை  யாரும் சேர்த்து கொள்ளவில்லை.  இவர்கள் ராகு, கேது என்று பெயர் பெற்றார்கள்


ராகு - மனித முகமும் பாம்பின் உடலுடனும்.  கேது- பாம்பின் தலையும் மனித உடலுடனும் உருப்பெற்றனர். தொடர்ந்து இவர்கள், கடும் தவம் புரிந்து சிவபெருமானின் அருளால், நவக்கிரக பதவியை அடைந்தனர். நிழல் கிரகமான இவர்கள் சக்தி தேவி மற்றும் விநாயகர் அவர்களின் கட்டுபாட்டில் மனித வாழ்கையில் நுழைந்தார்கள். மனிதனின் உடலில் 9 ஓட்டைகள் உண்டு இவர்கள் காற்றாக நம்முடைய
உடலில் நுழைவார்கள். தலை பாகம் கேதுவுக்கு, கால் பாகம் ராகுவுக்கு என்று பிரித்து கொண்டு நம்மில் வாசம் செய்வார்கள். சோதிட உலகில் இவர்கள் பங்கு பெரிய தொல்லைகள் உடையதாக இருக்கிறது.ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும்; அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் கிடைத்ததாகச் சொல்வர்.

இந்த கிரகங்கள், ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியடைவர்.இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. எந்த ராசியில் அமர்ந்துள்ளனரோ, அந்த ராசிக்கு உரிய கிரகத்துடன் இணைந்தே பலன் தருவார்கள். ராகுவின் தன்மைகளை புரிந்து கொண்டால் நமக்கு சில காரணங்கள் புரியும். இவரின் நட்சத்திரம் சதையம், சுவாதி, திருவாதிரை. கருமையானவர், தென்மேற்கு திசைக்கு அதிபதி, கிரகங்களில் பெண் கிரகம், இனத்தில் சங்கிரமன். வடிவில் உயரம், தொடை, பாதம் மற்றும் கணுக்காலுக்கு உரியவர்.

பஞ்ச பூதத்தில் ஆகாயமான இவர், சரக்கிரகமும் கூட ( மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சரராசிகள் என்பர் ) இவர் நமக்கு தீமையாக அமைந்து விட்டால் நம்முடைய கால்கள் பாதிப்பு அடைந்து இருக்கும், போதை பழக்கம் அல்லது மருந்து எப்பொழுதும் உண்ண வேண்டி வரும். இவர் பலமானால் தலைவலி மட்டும் வரும், விஞ்ஞானி , மருத்துவர், போன்ற துறைகளில் மேன்மையாக இருப்பார்.பில்லி ஏவல் சூன்யம் இவர்கள் எளிமையாக செய்வார்கள். சோதிடத்தில் நாக தோஷம் என்று இவரையும் கேதுவையும் சேர்த்து சொல்வார்கள்.

கேது இவரின் நட்சத்திரம் அஸ்வினி, மகம், மூலம். செந்நிறம் கொண்டவர், வடமேற்கு திசைக்கு அதிபதி, ஆண் கிரகம், இனத்தில் சங்கிரமன், மர்ம உறுப்புக்கு அதிபதி. பல வண்ணங்கள் கொண்ட வஸ்திரம் இவருக்குப் பிடிக்கும், பஞ்சபூதங்களில் ஆகாயம் இவர், ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீசண்டிகேஸ்வரரும் கேதுவின் அதிதேவதைகள். வாழ்வின் பிற்பகுதியில் பலன் தரும் கிரகம் இவர். கேது, நேர் எதிர் மறையான பலன்களை உடையவர். இவருக்கு எந்த தீய செயல் செய்தாலும் அதனை சரி செய்யும் மருந்து தெரியும். பாதிக்கப் பட்ட நபர்கள் இவரின் ஆசியால் சுபம் அடைவார்கள் .

சித்தர்கள் இவரின் வழியாக தான் சகல ஞான கணக்குகளை அறிவார்கள். ஞானமான இவர் ஒருவரின் ஜாதகத்தில் நன்கு அமைந்து விட்டால் பொது பணியில் சிறந்த பெயரையும் பலர் இவரை வணங்கும் படியாக இருப்பார்கள். நண்பர்கள் இவர்களை நன்கு மதிப்பார்கள். கால சர்ப்ப தோசம்கள் எப்படி செயல்படும் சில விளக்கம் மட்டும். ராகு, கேதுவின் பார்வைக்குள் லக்னத்துடன் சேர்த்து எல்லா கோள்களும் (7)

அடைபட்டு இருப்பது கால சர்ப்ப தோஷம், இது 18+18=36 வயது வரை சிலருக்கு,சிலருக்கு 36+9 =45 வயது வரையிலும் இருந்து பாதிப்பு தரும். மந்திர சாபம், வாலை சாபம், போன்ற சாபங்களுடன் தொடர்ப்பு பெற்று நாக சாபம் என்றும் / சர்ப்ப சாபம் என்றும் நம் கட்டத்தில் அமைந்து இருக்கும்.

இவைகள் நம்மை பாதிப்பது;

1. திருமணம் ப்ராப்தம் நகர்ந்து கொண்டே இருக்கும்.

2. எந்த ஒரு வேலையும் மிகவும் சிரமம் கொண்டு முடிக்க வேண்டும் .

3. நோயின் அறிகுறிகள் கண்டறிய முடியாது.

4. நம்முடைய உழைப்பு பிறருக்கு உயர்வு தரும்.

5. குழந்தை பிறப்பு இருக்காது.

6. சிலருக்கு, ஆண் மட்டுமே அல்லது பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.

7. சிலருக்கு; தலை, முதுகு, கால்கள் பலமற்று இருக்கும்.

8.அதிர்ஷ்டம், தரித்தரம், இவைகள் ஏற்படுவது இதனால் தான்.

9. போதை, களிப்பாட்டம், இவைகள் தான் வாழ்க்கை என்று இருப்பர்.

10. மன நலம் பாதிப்பு, மாந்தரிக பழக்கம், தொல்லைகள் இருக்கும் /உண்டாகும் .

இவைகள் பொதுவான பலன்கள் இனி இவர்களின் பரிகார கோவில்களை பார்போம். ராகு கேது க்கு சரியான பரிகார ஸ்தலம் திருப்பதி ஶ்ரீகாலஹஸ்தி தான். சைவர்களுக்கு திருபாம்புரம் - கும்பகோணம். ஆண் சாபம்  மேல பெரும் பள்ளம் - பூம்புகார். பெண் சாபம் கிழ பெரும் பள்ளம் - பூம்புகார். ஆண் சாபம் திருசேரை-கும்பகோணம். பெண் சாபம் திரு நறையூர் --புதுகோட்டை வழி பொன் அமராவதி பாதை. பெண் சாபம்
கால ஹஸ்தி -- திருப்பதி. வைணவர்களுக்கு கோடி ஹத்தி பெருமாள் --இன்று கோழி கொத்தி பெருமாள் என்று மருவி உள்ளது . ஆண் சாபம் --மாயவரம் குத்தலாம் பாதையில் , திருகண்ணன் மங்கை பெருமாள் -- கொரடசெரி வழி குடவாசல் பாதையில் --பெண் -சாபம் போக்கும் கோவில் .

மேலும் புற்றுடன் உள்ள மாரியம்மன் கோவில், காளி கோவில் புற்றுடன் உள்ள சிவ பெருமான் கோவில். பொதுவான பரிகாரத் தலங்கள் ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீ படம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீ மானிக்க தியாகேஸ்வரரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும். கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ள கதிராமங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள். ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.

சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண் டின்ய மகரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன், ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள். ராகு மற்றும் கேதுவால் உண்டான தீமைகள் விலகும். காஞ்சீபுரம் - ஸ்ரீ சித்ரகுப்தர் ஆலயம் சென்று அவரை வழிபடுவதுடன் கொள்ளு, உளுந்து மற்றும் பிரவுன் நிற துணிகளை தானம் செய்யுங்கள். பசுவுக்கு ஏதேனும் உண்ண கொடுக்கவும்.

ஸ்ரீவாஞ்சியம்: நன்னிலம்-குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நாக தோஷத்தால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் நீராடி, நாகநாத சுவாமியையும், நாக ராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும். விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவினால் உண்டான தோஷங்கள் விலகும்.

திருப்பத்தூர்-திண்டுக்கல் சாலையில் சிங்கம் புனரிக்கு அருகில் உள்ள தலம் பிரான்மலை. இங்கு நாகராஜன் வழிபட்ட குயிலமுதநாயகி கொடுங்குன்றீசரை, தேன்-தினைமாவு கலந்து படைத்து வழிபடவும். சென்னை, மைலாப்பூரில் கோவில் கொண்டுள்ள முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டு வர ராகு-கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆதிசேஷன் வழிபட்ட திருநாகேஸ்வரம் சென்று சூரிய புஷ்கரணியில் நீராடி ஸ்ரீ சண்பகா தண்யேஸ்வரர், ஸ்ரீ கிரிஜகுசாம்பிகையை நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள் நினைத்தது நிறைவேறும்.

ஸ்ரீகாளஹஸ்தி சென்று அங்கு கோவில் கொண்டிருக்கும் அருள்மிகு ஞானபூங்கோதையம்மை உடனுறை அருள்மிகு காளஸ்தீஸ்வரரை வணங்கி வழிபட்டு வர நிம்மதி கிடைக்கும். திருச்சி சென்று இந்திரனும் நாககன்னியர்களும் வணங்கி வழிபட்ட மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள். உங்கள் வாழ்வில் சுபீட்சம் காணுவீர்.  சர்ப்பதோஷ முள்ளவர்கள் பாம்பு புற்றிற்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து எலுமிச்சையை புற்றின் மீது வைத்து புற்றினுள் பால்விட்டு மூன்று முறை வலம் வர வேண்டும். நாகபஞ்சமி அன்று மட்டும் 9 முறை வலம் வர வேண்டும். குடும்பநலம், மகப்பேறு, சிரமமில்லாத பிரசவம் உண்டாகும். ராகு-கேது தசை நடப்பில் உள்ளவர்கள் நோய் நீங்க இந்த வழிபாடு செய்ய வேண்டும்.

ராகுவிற்கு ராகு காலத்தில், கேதுவிற்கு யமகண்ட நேரத்திலும், வழிபாடு செய்து உங்கள் தோசத்தை அமிர்தமாக மாற்றி கொள்ள, என்னுடைய வாழ்த்துக்கள்.

- நன்றி : NTN சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேச சிவாச்சாரியார்

Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்