அன்று நூறு வயதை தாண்டியும் ஊள்றுகோல், கண் கண்ணாடி, காது கருவி, தலைக்கு கருப்புசாயம், தேடாத முன்னோர்கள் பலர். இன்றைய சர்க்கரை, பல் சொத்தை, ஆண்மை குறைவில்லாத நிலை, மூட்டுவலி இன்னும் விதவிதமான வியாதிகள் இல்லாமல் உடலை வளர்த்தார்களே அவர்கள். எப்படி??? காரணம், நம்மை சுற்றியே அன்றும் இன்றும் என்றும் ஆரோக்கியம் தந்த அற்புதமாக தானாக வளரும் கீரைகளே. நாம் தான் அதை இன்று உள்ள சோம்பேறித்தனத்தால் தேடுவதில்லை. பொதுவாக கீரைகள் என்று தனியாக பூமியில் முளைப்பதில்லை. நம்மைச்சுற்றியுள்ள தமிழ் நிலத்திலுள்ள மூலிகைகள் பலவற்றையும் கீரைகளாக காலங்காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர் நமது முன்னோர்கள். நஞ்சுத்தன்மை இல்லாத சுவைதரக்கூடிய அனைத்துமே கீரைகள்தான்.
இவற்றில் கிடைக்கும் கீரைகளை அனைத்தையும் கலந்து போட்டு சமையல் செய்தால் அது கலவைக்கீரை. இன்னும் எத்தனையோ.. இவையெல்லாம் தானாக வேலி, வயல், காடு, மரம் போன்ற இடங்களில் வளர்ந்து வீனாகப்போகிறது. இந்த கீரைகளை யாரும் ரசாயன உரம் போட்டு வளர்பதில்லை, மண்ணில் உள்ள இயற்கை சத்துக்களின் மூலம் தானாகவே வளர்கிறது இக்கீரைகளை கூட்டு, பொரியல், துவட்டல், கடைசல், துவையல், சட்னி ரசம், சூப் ,சாம்பார்,குருமா, என ஒவ்வோறு கீரையையும் அதன் குணத்தை பொருத்து சமைத்து சாப்பிட நல்ல சுவையாகவும், உடலுக்கு உரம் ஏற்றும் உணவாகவும் இருக்கும் நண்பர்களே.எல்லா இடத்திலும் வளரக்கூடிய நம் நாட்டில் வாழும் நம் உணவுகளே, இதையே நம் முன்னோர்கள் தினம் ஒரு கீரையாக சாப்பிட்டு நோய்கள் இன்றி வாழ்ந்தார்கள், நாமும் பார்த்த இடத்தில் பறித்து சமைத்து சாப்பிடலாமே நண்பர்களே.
பிரண்டை... சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை... என பல வகைப்படும். இதற்கு, `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. `Cissus quadrangularis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இது, கொடி வகையைச் சேர்ந்தது.
இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.
அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.
எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.
மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும். மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.
எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் துவையலைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். இளம் தண்டுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து, நன்றாகக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப் போடுவதன் (பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவது) மூலம் பலன் கிடைக்கும். எலும்பு முறிவு மட்டுமல்லாமல், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வலி உள்ள இடங்களிலும் இதைப் பூசிவர நிவாரணம் கிடைக்கும்.
துவையல் பிரண்டைத் தண்டுகளின் மேல் தோலை அகற்ற்றி, அதில் உள்ள நாரையும் அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். சுவைக்காக தேங்காய், உளுந்து சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
இலைத் துவையல் பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும். இலை 100 கிராம், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு - 3 பல், மிளகு - 5, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மஞ்சள், உப்பு ஆகியவை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். முதலில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கி, ஏற்கெனவே அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்தால் துவையல் தயார்.
வற்றல் நன்கு முற்றிய இதன் தண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்து உலர்த்தி வற்றலாக்க வேண்டும். அந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் பசியின்மை, நாக்குச் சுவையின்மை போன்றவை குணமாகும்.
பிரண்டை உப்பு பிரண்டையை உலர்த்தி எடுத்து தீயில் எரித்துச் சாம்பலாக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து, வடிகட்டி, அரை நாள் தெளியவைக்க வேண்டும். அப்படி தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 முதல் 10 நாள்கள் வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர் முழுவதும் வற்றி உலர்ந்த பிறகு கீழே படிந்திருக்கும் உப்பைச் சேகரித்து வைக்கவும்.
பிரண்டை உப்பில் 2 முதல் 3 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்துச் சாப்பிட 2 மாதத்தில் உடல்பருமன் குறைந்து, ஊளைச் சதையும் குறையும்.
2 கிராம் பிரண்டை உப்புடன் ஜாதிக்காய்த்தூள் 5 கிராம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், ஆண்மைக்கோளாறு பிரச்னை தீரும். வீரியம் பெருகும்; உடல் வலிமை பெறும்.
வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு 2 கிராம் வெண்ணெயுடன் இந்த உப்பைக் கலந்து இரண்டு தடவை கொடுத்தால், மூன்று நாளில் குணமாகும்.
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழியின் விளக்கம் , வெறும் ஏட்டு கல்வி வாழ்க்கைக்கு உதவாது. அனுபவ படிப்பே வாழ்க்கையை மேம்படுத்தும் . கல்வியினால் அறிவு பெருகும் ஆனால் அறிவை பயன்படுத்தி அனுபவத்தை பெற்றால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் . இதுபோல நம் முன்னோர்கள் வேறு ஒரு விளக்கத்தை தந்துள்ளார்கள் அது என்னவென்றால், சுரக்காய்- ஐ நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது, அது நம் உடலில் உள்ள உப்புகளை நீக்கிவிடுகிறது உடலில் உப்புச்சத்து அதிகமாக உள்ளவர்கள் அதிக அளவில் சுரைக்காயை உண்ணும் பொழுது உப்பு சத்து குறைந்து விடுகிறது அதனால்தான் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்லி உள்ளார்கள் இந்த இடத்தில் கறி என்பது உப்பை குறிக்கும். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதன் அர்த்தம் என்ன? 3 பதில்கள் இரவீந்திரன் சிவன் , வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு-இல் தலைமை பொறுப்பாளர் June 19, 2019 அன்று பதில் அளிக்கப்பட்டது ·எழுத்தாளர் 391 பதில்களையும் 604.7ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார் எட்டிக் காஞ்சிரங்காய் - என்பதே ஏட்டுச் சுரைக்காய் என தவறுதலாகப் பயனில்...
SPIRITUAL SURPRISES - 85 - ஆன்மீக ஆச்சரியங்கள் ------------------------------ ------------------------------ உலகில் முதலில் தோன்றிய கோவில் : ------------------------------ ------------------------------ சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணியத் தலங்களில் ஒன்று உத்திரகோசமங்கை திருத்தலம். உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில் இது என்று கூறப்படுகிறது. ‘மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது’ என்பார்கள். ஆதி காலத்தில்... அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான உத்தரகோசமங்கை. இக்கோசமங்கை கோவிலில் மங்களநாதர், மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். ------------------------------ ------------------------------ ------- Uthirakosamangai (Tamil: உத்திரகோசமங்கை): திருஉத்தரகோசமங்கை-^-ஈசன் ஈஸ்வரி-^- ------------------------------ ------------------------------ -...
அன்னம்+காவடி சிவகிரி, சத்தியகிரி ஆகிய இரு மலைகளையும் அகத்திய முனிவரின் சீடனான இடும்பன் காவடியாகக் கட்டி, கயிலையில் இருந்து எடுத்து வந்ததாகப் பழநி ஸ்தல புராணம் கூறுகிறது. பழநியிலுள்ள இந்த இரு மலைகளுக்கும் காவல் தலைவன் இடும்பன்தான். அவன் காவடி எடுத்து வந்ததை நினைவுகூரும் வகையில் இந்தப் பிரார்த்தனை வழக்கம் ஏற்பட்டதாகக் கூறுவர். ‘கா’ என்றால் காப்பாற்றுதல்; ‘அடி’ என்றால் முருகப்பெருமானின் திருவடி என்று பொருள். காவடி எடுத்தலில் பால்காவடி, பன்னீர்க்காவடி, பஞ்சாமிர்தக் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி, புஷ்பக்காவடி, சேவல் காவடி, சர்ப்பக் காவடி எனப் பல வகை உண்டு. முருகப் பெருமானுக்கு மட்டும் காவடி (திரு கோ. அண்ணாமலை, PJK, ஜெரண்டுட், பகாங், மலேசியா) இயற்கையைப் போற்றிய பழந்தமிழரிடம் இறை உணர்வு இருந்தது. இதனைத் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. தமிழர்களிடம் முருக வழிபாடு என்பது மிகத்தொன்மையனது. எனவே, தெய்வத் திருத்தோற்றங்களிலே தனியொருவடிவமாக நின்று, தனித்தமிழ்க் கடவுளாகக் காட்சி தருகின்ற முருகப் ...
Comments
Post a Comment