அம்மாவின் அடையாளம்

அம்மாவின் அடையாளம்

அம்மாவின் அடையாளம்

எனக்கு !அழ சொல்லிகொடுத்த
உன் ! கண்ணில் விழும் முன்னே
கண்ணீர் விழ வைத்தேனே.........

வெட்டி தூக்கம் போட்ட வயசுல கூட
வேடிக்க பார்த்து ரசுச்சுருப்ப,
நான் !கீழ விழும்போதெல்லாம் தரையை திட்டி -
தட்டி கொடுத்துருப்பையே மா எனக்கு.........

எனக்கு ! சோறு ஊட்டும் போதெல்லாம்
நீ ! பட்ட பாடு இருக்கே ?
எனக்கு !சோறு ஊட்டுனத விட
நிலாவுக்கு அதிகமா சோறு ஊட்டியிருப்ப........

உன் ! சேலையில தொட்டில் கட்டி
ஆட்டும் பொது உலகத்தையே சுத்தியிருப்பேன்,
நான் ! சேட்டை செஞ்சப்பையெல்லாம் - என்ன
அடிச்சுப்புட்டு , நீ ! உட்கார்ந்து அழுவையே மா..........

காலம் கடந்து போக
கடந்து போனது ,
என் !குழந்தை பருவம்
போனது போகட்டும்...........

வானத்தில் இன்னும் நிலா இருக்கு
சோறு ஊட்டுவையா மா
நிலவுக்கு அல்ல
எனக்கு................
- ச.கௌரி சங்கர்


Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்