Posts

Showing posts from April, 2023

நந்தி பகவானின் கல்யாணம் நடந்த கோயில்!

Image
நந்தி பகவானின் கல்யாணம் நடந்த கோயில்! நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் அரியலூர் மாவட்டம், திருமழபாடி என்ற ஊரி ல் உள்ள கோயில் தான் வைத்தியநாதர் கோயில்.இங்கு வைத்தியநாதசுவாமி மூலவராவும், சுந்தராம்பிகை அம்மன் தாயாரும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.பனை மரம் தான் கோயிலின் தலவிருட்சம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன.பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது.கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார். மேலும் இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீரா டுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள்குணமாகிறது நம்பிக்கை இருக்கிறது. பக்தர்கள் சிவனுக்கும் நந்தி க்கும் நடுவி ல் இருக்கும் மூன்று குழிகளை நவக்கி ரகங்களாக கருதி , அவற்றில் தீபமே ற்றி வணங்குகின்றனர். இந்தத் தலத்தில் இருந்த நவகிரகங்களை ஈசன் தம் நெற்றிக்கண்ணால் அழித்துவிட்டராம். அதன் காரணமாக முக மண்டபத்தில் உள்ள மூன்று குழிகளையே நவகிரகங்களா கபாவித்து வழி படுகின்றனர். சருமநோயினால் அவதிப்பட்ட சந்திரன், இந்தத் தலத்து இறை வனை வழிப்பட்டான்.சந்திரனுக்குக் க...

வாஸ்து பகவான் எப்படி உருவானது; புராணக்கதை...!!

Image
  வாஸ்து பகவான் எப்படி உருவானது; புராணக்கதை...!! முன்பொரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன், தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்து போரிட்டான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது. மிகவும் கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி ஏற்பட்டது.  கண்ணில் கண்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்க வேண்டும் சிவபெருமானிடம். சிவபெருமான் அந்த பூதத்திற்கு அனைத்தையும் உண்ணும் வரத்தை அளித்தார். இதனால் அந்த பூதத்திற்கு இந்த பூமியையே அழிக்கும் சக்தி உண்டானது. உடனே தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிறகு பிரம்மதேவன் அந்த பூதத்திடம் பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை சாப்பிடுவார்கள், சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வசிப்பவரை வாட்டு என்றும் வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்றும் வாஸ்துப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மைகளையும், மற்றவர்களுக்கு தீமையையு...

அட்சய திருதியை உருவான வரலாறு, Akshaya Tritiya Story Tamil

Image
அட்சய திருதியை உருவான வரலாறு, Akshaya Tritiya Story Tamil சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, 'அட்சய திருதியை' எனப்படுகிறது. 'அட்சயம்' என்றால் வளர்வது என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ளக் குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது. அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையும்என்றும் கூறப்படுகின்றது. அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான வாழ்வு அமையும். அட்சய திருதியை அன்று பிறருக்கு பானகம் மற்றும் நீர்மோர் வழங்குவது சிறப்பு. தண்ணீர் தானம் கூட சிறந்தது. அட்சய திருதியை கொண்டாடுவது எவ்வாறு உருவாகியது? ஒரு சமயம் பாஞ்சாலை நாட்டை பூரியசஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சிக் காலத்தில் பாஞ்சாலை நாட்டில் கடும் வறட்சி நிலவியது. மன்னரும் மக்களும் வறட்சியால் கட...

சித்ரா பௌர்ணமி 2023

சித்ரா பௌர்ணமி 2023 மே 05, 2023, வெள்ளிக்கிழமை நல்ல நேரம் (குலிகை) 07:21 AM முதல் 09:00 AM வரை விஷ நேரம் (ராகு காலம்) காலை 10:39 முதல் மதியம் 12:18 வரை ஆபத்து நேரம் (யமகண்டம்) 03:36 PM முதல் 05:15 PM வரை திதி 2023-மே-04 இரவு 11:44 மணிக்கு தொடங்குகிறது 2023-மே-05 இரவு 11:03 மணிக்கு முடிவடைகிறது சித்ரா பூர்ணிமா மேஷ ராசியில் சூரியன் இருக்கும் போது , வேதகால புத்தாண்டின் தொடக்கத்தை அறிவிக்கிறது . வேத புத்தாண்டின் முதல் முழு நிலவு சித்ரா நட்சத்திரத்தில் பிரகாசிக்கும் போது , ​​அது சித்ரா பௌர்ணமி அல்லது சித்ரா பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. சித்ரா பூர்ணிமாவின் முக்கியத்துவம் துலாம் ராசியில் உள்ள சித்திரை முழு நிலவு “கர்மாவை சமநிலைப்படுத்தும்” சந்திரன். இந்த ஆற்றலுடன், சித்ரா நட்சத்திரம் "மிகுதி" மற்றும் "மீளுருவாக்கம்" ஆற்றல்களை சேர்க்கிறது. எனவே, இந்த நாளில் பூமியில் பிரகாசிக்கும் சந்திரன் நேர்மறை மற்றும் ஆக்கபூர்வமான ஆற்றல்களால் நிரம்பி வழிகிறது - செல்வம், ஆரோக்கியம் மற்றும் உறவுகளை அனுபவிப்பதில் இருந்து உங்களைத் தடுக்கும் எதிர்மறை கர்மாவை அகற்றுவதில் பயனுள்ள ஆற்றல்கள்....