நில அபகரிப்பு வழக்குகள் குளறுபடி பிரச்னை வித்தியாசம் தெரியவில்லையா? உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

நில அபகரிப்பு வழக்குகள் குளறுபடி பிரச்னை வித்தியாசம் தெரியவில்லையா? உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி புதுடெல்லி: ‘தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்குகளின் குளறுபடிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் தான் முழு காரணம்,’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருவதாகவும், அந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரியும் ஈரோட்டை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்றும் விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் கிருஷ்ணமூர்த்தி, ‘நில அபகரிப்பு தொடர்பான பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் விசாரணையில் உள்ளது. அப்படி இருக்கையில் சம்மந்தப்பட்டவர்கள் நேரடியாக நிவாரணம் கேட்டு உயர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். இதனால்தான், நில அபகரிப்பு தொடர்பான வழக்குகள் தொடர்ச்சியாக நிலுவையில் உள்ளன,’ என தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராம்சங்கர், ‘உச்ச ந...