காரணம் இல்லாமல் காரியங்கள் இல்லை

காரணம் இல்லாமல் காரியங்கள் இல்லை.PDF நீண்ட நாட்களாக பலர் மனதில் இருந்த கேள்விகளுக்கு பதில்....... பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர் உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்,உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே,இந்தஅவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள்,தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார். தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு,சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த பல கண்ணனின் லீலைகள்,புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன.அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார். "பெருமானே ! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வா...